வெள்ளம் என்ற பேராசிரியர் 

 "டிச 1,2015 ,  செம்பரம்பாக்கம் ஏரி தப்பி , அடையாற்று கறையோரம் , ஊர் சேர்ந்தது மழை" .பொதுவாக சோகமாக இருக்கும் ஒருவரை பார்த்து "என்ன குடியா  மூழ்கி விட்டது ?" என்று கேட்பர். ஆம் குடி மூழ்கிய தினம் தான் அன்று.
                     காலை 11 மணியளவில் ஏரியில் இருந்து உபறி நீர் திறந்துவிடப்பட்டதாக பக்கத்துவீட்டுக்காரர் கூறினார். சுமார் 15 நாட்கள் முன்பு தான் ஏரி திறக்கப்பட்டு அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, முன்னங்கால் அளவு நீர்  வீடுகளுக்குள் புகுந்தது. அத்துயரம் நீங்குவதர்க்குள், மீண்டும் ஏரி திறப்பு என்ற செய்து அனைவரையும் பீதியடையச்செய்தது. எங்கள் பகுதி முழுக்க பதட்டம் நிலவியது. பொதுவாகவே செவிவழிச்செய்தியை பெரிதும் நம்பாதவன் நான். அதனால், எதிர்வீட்டிற்கு பின்புறம் ஓடிக் கொண்டிருக்கும் அடையாற்றின் அளவை மதிப்பிட ,இடை விடாமல் கொட்டும் மழையில்  குடைப்பிடித்து சென்றேன். நீரின் அளவு மிகவும் உள்வாங்கியிருந்தது. ஆற்றின் மட்டத்தில் இருந்து சாலை சுமார் 12 அடி உயரம் இருக்கும்.
     வீடு திரும்பி "மா , தண்ணீ ரொம்ப கம்மிய தான் ஓடிகிற்றுக்கு , பயப்படாதீங்க" என்றேன். சுமார் 20 வருடங்களாக அப்பகுதியில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நாங்கள் , 2005 ஆம் ஆண்டு ஒரு முறை வெள்ளத்தை சந்தித்து இருக்கிறோம். என்னை போன்ற பாதிக்கப்பட்டவர்கள் தவிற மற்றவர்களுக்கு அது  நினைவிருக்க வாய்ப்பில்லை.
     மூன்று மணியளவில் , நீரின் அளவை மறு ஆய்வு செய்ய சென்றேன் , நம்ப முடியாத அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்து இருந்தது.!!!!!!! நீரினளவு உயரும்  வேகத்தை வைத்து சுமார் 2 மணி நேரத்தில் நீர் சாலையை தொட்டுவிடும் என்று கணக்கிட்டேன்.  சற்றும் அதனை ஏற்க முடியாதவனாய் வீடு திரும்பி , தொலைக்காட்சி செய்தி மூலம் என்ன நடக்கிறது என்று  தெறிந்து கொள்ள முயன்றேன் . "15000 கன அடி உபறி நீர் திறப்பு "  "22000 கன அடி நீர் திறப்பு "  "30000 கன அடி நீர் திறப்பு " என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் , தங்களுக்கு பிடித்த எண்னை ஒளிபரப்பி,  தங்களது பங்கிற்கு குழப்பி சென்றனர். (யார் பேரிய எண்னை  கூறி மக்களை முதலில் குழப்புவது என்று ஊடக நண்பர்கள் போட்டி போட்டுகொண்டனர் போலும்). முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருள் சூழ்ந்தது , முழதாக பொழுது சாய்வதர்குள் வீட்டில் உள்ள அனைத்து!!!! பொருட்களையும் , பாதுகாப்பான உயரத்திற்கு கொண்டுச்செல்ல வேண்டும்.
    எது பாதுகாப்பான உயரம்? அலமாரியின் இரண்டாம் அடுக்கா  , ஐந்தாம் அடுக்கா  ? அல்லது முதல் தலமா? எது விலை மதிக்க முடியாத பொருள் ? எதனை முதலில் எடுப்பது ? என்பன போன்ற பல கேள்விகள், மனதில்  ஓடிக்கொண்டிருக்க. "மோட்டார கழட்டு டா ... கிரைண்டர தூக்கு டா ... பிரிட்ஜ''ஐ  மாடிக்கு  தூக்கிட்டு போ.. பெட் , தலையணை எல்லாம்  அலமாரியின் கடைசி அடுக்கில் வை ... கம்ப்யூட்டர எங்க வைக்க போற? , துணிகள் அனைத்தையும்!!!! மூட்டை கட்டி மேல போடு , உன் வண்டிய பாதுகாப்பான தூரத்ல விட்டுட்டு வா!!" என்று என் அம்மா , அனைத்து கட்டளைகளையும் நொடிப்பொழுதிலிட்டார்.  முடிந்த வரை போராடி பொருட்களை உயரத்தில் ஏற்றி வைத்து கொண்டிருந்தோம்.
    என்னை பொறுத்த மட்டில் பொருட்களை விட அனைவரின் பாதுகாப்பே முக்கியமானது. எடுத்து வைத்த வரை போதும், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினேன் . அனால் முடிந்த வரை பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எண்ணம். இதில் எது 
சரி என்று பட்டிமன்றமே வைக்கலாம். எங்களிடம் இருந்த நேரமோ மிக மிக குறைவு, அக்குறுகிய நேரத்தில் எது விலைமதிப்புள்ள பொருள் என்று தீர்மானித்து , அதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும்.
        நம் வீட்டிலுள்ள பொருட்களில் எது முக்கியமோ அதனை மட்டும்எடுத்து கொள்ளலாம்,அதிலும் கையில் கொள்ளும் அளவு பொருட்கள் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் , மற்றவை உங்களிடத்தில் இருந்து பறிக்க படும் என்ற சூழல் நம் ஒவ்வொருவருக்கும் வந்தால் நாம் எதனை தேர்ந்தெடுப்போம் என்று சற்று சிந்தித்து பாருங்கள் ? மிகவும் கடினமான கேள்வி.
     அப்படி ஒரு தருணம் தான் எங்களுக்கு, மொத்தத்தில்  நான் தேர்ந்து எடுத்து இவை மட்டுமே , என் முதுகுப்பை, இரன்டு நாட்களுக்கு தேவையான துணி, கைப்பேசி ,  harddisk, சான்றிதழ்கள் மற்றும் என்னுடைய ஒரு ரப்பர் பந்து!!!. பல நேரங்களில் நான் ஏன் அந்த ரப்பர் பந்தினை எடுத்து வைத்தேன் என்று என்னுள் கேட்டுக் கொண்டதுண்டு. ஒரு வேலை சிறிய வயதில் 'அப்பந்தினை தாயார் பனைய கைதியாய் வைத்து கொண்டு என்னிடம் வேலை வாங்கியது காரணமாக இருக்கலாம். இல்லை தன் வீட்டில் பந்து விழுந்ததும் அதனை தர மறுத்து, தகாத வார்த்தைகள் பல பேசி , அப்பந்தினை அரிவால் மனையில் வைத்து அறுத்து எறிந்த பக்கத்து வீட்டுக்காரரம்மா ஏற்படுத்திய தாக்கமாக  இருக்கலாம். 
         மொத்தத்தில் அந்த நிமிடம் எனக்கு விலையுயர்ந்த பொருளாக இருந்தது நான் எடுத்து கொண்ட பொருட்கள் மட்டுமே. நாம் பலவாறாக பல பொருட்களை நம் வாழ்க்கையில் சேர்க்கிறோம், உண்மையில் நம் தேவை மிக மிக குறைவு. அதனை வெள்ளம் என்ற பேராசிரியர் பேரழிவு ஏற்படுத்தி சில நாட்களில்  கற்றுக்கொடுத்தார்.
            வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் , என் பெரியப்பா வீடு உள்ளது. அவர்கள் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. பெரியப்ப வீட்டிற்கு செல்லும் நோக்கத்தில் , என் முதுகுப் பையை  எடுத்து வைத்து கொண்டு. மேசை கனினியையும் , மியுசிக் கீபோர்ட் மற்றும் இதற மின் சாதனப்போருட்களை மேல் அடுக்கில் எடுத்து வைத்தேன்.
                சற்று நேரத்தில் முழுதாக இருள் சூழ்ந்தது, ஆற்று நீர் , வீட்டின் வெளிப்புற கேட்'டினை மெல்ல உலுக்கி உள்ளே வர அனுமதி கேட்பது போல் நடித்து கொண்டிருந்தது. கழிவறையிலும்,குளியலைறையிலும் , டொமெக்ஸ் (Domex) விளம்பரத்தில் வரும் கிருமிகளைப் போல் கழிவு நீர் கொப்பளித்து  கொண்டிருந்தது. வீட்டை சுற்றி நீர் இருந்ததால் நீரின் அழுத்தம் காரணமாக தரையில் இடப்பட்டு இருந்த கிரனைட் கற்களுக்கு நடுவே நீர், ஊற்று போல் ஊற ஆரம்பித்தது.
  (வீட்டு கதவு , ஜன்னல் எல்லாம் பூட்டி தான இருந்தது அப்றம் எப்பிடி தண்ணீர் வந்தது!!!!!!!!!? என்று பலரும் என்னை கேட்கின்றனர்.முந்தைய பத்தி அவர்களுக்கு சமர்ப்பணம்)
    "வாங்க எல்லாரும் கெலம்பலாம், எடுத்த வச்ச வரைக்கும் போதும். இப்போவே தண்ணி ரோட்ல முட்டிக்கு மேல வந்துடுச்சு  " என்று என் தங்கையையும் , தாயையும்  , தந்தையையும் அழைத்தேன். ஆனால் சில தவிர்க்க முடிந்த!!!! காரணங்களால் அவர்களுக்கு வீட்டை விட்டு வர மனமில்லை. மாடியில் , வாடகைக்காரர் வீட்டில்  தங்கிக்கொள்ளலாம் என்று என் அழைப்பை மறுத்து விட்டனர். வழக்கம் போல்! என் பேச்சை அவர்கள் கேட்க மறுத்தது , எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. எனக்கு அவர்களின் முடிவில் உடன்பாடில்லை , தவறான முடிவு என்று என் மனம் குமுறியது . எவ்வளவோ போராடியும் அவர்கள் முடிவில் இருந்து சற்றும் மாற வில்லை. 
     எங்கள் தெருவில் இருந்து பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றனர். ஒரு அசாதாரமான அமைதி நிலவியது. மழையின்  சத்தமும் , சாலையில் , சலக் சலக் என்று தண்ணீரில் நடந்து வெளியேறி செல்வோரின் சத்தத்தையும் தவிற வேறு எதுவும் கேட்கவில்லை. 
          நீரின் அளவு வீட்டினுள் அரை அடி உயர்ந்தது . என் குடும்பத்தார் மாடியில் வாடகைக்கு குடியிருப்போர் வீடுகளில்(2 சிறிய 10 * 10 அரை ) தஞ்சம் புகுந்தனர். நானோ , என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை என்ற கோபத்தில் , படிக்கட்டிலேயே அமர்ந்தேன். அவ்வாறு இருந்தாலாவது , என் பேச்சை கேட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஒத்துக்கொள்வார்கள் என்று எண்ணினேன்., இருந்தும் பயனில்லை. என் முதுகுப்பையை மாட்டிக் கொண்டு, 'வகுப்பு முடிந்தும் தன்னை கூப்பிட இன்னும் யாரும் வரவில்லையே என்று எண்ணி வருந்தி, காலை மடக்கி , தலை குனிந்து , படிக்கட்டில் அமர்ந்து வருந்திக்கொண்டிருக்கும் சிறுவனைப்போல்' , எங்கள்  வீட்டு படிக்கட்டில் இரவு முழுக்க  அமர்ந்து கொண்டிருந்தேன். பலமுறை என்னை சாப்பிட உள்ளே வருமாறு அழைத்தும் , மறுத்தேன். வெளியேறி சென்று தங்க இடம் இருந்தும் அவர்கள் வர மறுத்து , சிறு அரையில் கால் நீட்ட கூட இடம் இல்லாமல், குமிந்து கிடக்கும் பொருட்களுக்கு இடையில்  படுத்து உறங்குவதை எண்னி என் மனம் வருந்தியது.
              சுமார் 12 மணியளவில் , 3 படிகட்டுகள் முழுமையாக மூடப்பட்டிருந்தது. படிக்கட்டின் மேற்கூரையில் இருந்து வடியும் மழை நீர் , படிக்கட்டில் மீதம் இருந்த உலர்ந்த தரையையும் நனைத்து கொண்டிருந்தது , சிறு சிறு பெயர் தெரியாத பூச்சிகளும் , கரைப்பான் பூச்சிகளும்  நீரின் கறையில் அசைவாடிகொண்டிருந்தது , மாடியின் வாயில் வழியாக மழைச்சாறல் அடித்துக் கொண்டிருந்ததது  , இவைகளுக்கு நடுவில் அமர்ந்த இடத்தில் இருந்து சற்றும் நகராதவனாய் , நீரினளவு குறைந்து விடாதா ? என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.
           நேற்று வரை நான் உறங்கிக்கொண்டிருந்த என் படுக்கை இந்நேரம் நீருக்குள் மூழ்கி இருக்கும்,  சில மணி நேரம் முன்பு நாங்கள் அமர்ந்து உணவு அருந்திய இடத்தில் , தற்போது கழிவு நீர் ஒடி கொண்டிருக்கும்  என்று மனம் புலம்பியது. புதிதாக சாயம்(paint) பூசபட்ட சுவற்றை , நீர் அழுக்காக்கிக் கொண்டிருக்கையில் ,  'எண்ணெய் தலையோடு சுவற்றில் சாயாதடா ', ' அழுக்கு காலோட வீட்டுக்குள்ள வராத டா' என்றெல்லாம் என் அம்மா என்னை வசை பாடுவது நினைவிற்கு வந்தது.
    மணி ஒன்ரைத்  தாண்டியிருக்கும் , மழை நின்றபாடில்லை.. நீரினளவும்  உயர்ந்து கொண்டேதான் இருந்தது. எனக்கும் நீருக்குமான இடைவெளி குறைந்து கொண்டே இருந்தது. நீரினளவு உயர, உயர நான் ஒவ்வொரு படியாக மேலே ஏறி அமர்ந்தேன். மழைச்சாறல் என்னை மெல்ல நனைத்து விட்டுருந்ததால் , குளிர ஆரம்பித்தது. முதுகுப்பையில் இருந்து துண்டு ஒன்றை எடுத்து கால்களை மட்டும்மூடிக்கொண்டு , அடுத்த படியில் சற்றே தலை சாய்த்தேன்.
   பெரும்பாலான பொருட்களை , மூன்றாம் அடுக்கிற்கு மேலே தான் எடுத்து வைக்க முடிந்தது. என்னுடைய பள்ளி /கல்லூரி புத்தகங்கள் ,துணிமணிகள், மின் சாதன பொருட்கள் என அனைத்தும் பரணில் இருந்தது. அவைகளை பரணில் எடுத்து வைக்கும்போது 'நானே chair ல ஏறி தான் பொருளெல்லாம் வக்கிறேன், இதுக்கு மேலய தண்ணி வந்துட போகுது' என்று அறிவிலி போல்  மனித உயரத்தையும் , வெள்ளத்தின் உயரத்தையும் ஒப்பிட்டு மனதில் கணக்கிட்டு கொண்டேன். 
     நீரினளவும், என் தன்னம்பிக்கையும் தலைகீழ் விகிதத்தில்(inversely proportionall) இருந்தது. அதிகமாக குளிரடித்ததால் ,  வீட்டின் மொத்த பரப்பளவில் பாதியில் மட்டும் கட்டப்பட்டிருந்த இரண்டாம் தளத்திற்கு செல்லும் படிக்கட்டில் தஞ்சம் புகுந்தேன். குளிர் அதிகமாகி கொண்டே இருந்ததால் , ஒரு துண்டுக்குள் என்னை முழுதாய் மூடுமளவிற்கு , உடலை சுருக்க முயற்சித்து கொண்டே சில மணி நேரங்களை கழித்தேன்.
   சுமார் 3 மணியளவில் பெரியப்பா வீட்டில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது 'கால்வாய் வழியாக எங்க வீட்லயும் தண்ணி வந்துடுச்சு, பொருட்கள எடுத்து வச்சுட்டு இருக்கோம். பத்திரமா இருங்க' என்றார் பெரியப்பா.  சென்னை நகரத்திற்கு மழைநீர் வடிகால்களாக விளங்கும் பல கால்வாய்கள்  அடையாற்றில் தான் கலக்கிறது. இவ்வளவு காலமாக அக்கால்வாய்கள் வழியாக வரும்  அனைத்து குப்பைகளையும் /கழிவுகளையும் தன்னுள் ஏற்றுக்கொண்ட ஆறு , இம்முறை அதனை மீண்டும் நகரத்திற்கே கொடுத்தது.அதனால் அனைத்து கால்வாய்களிலும்  நீர் எதிர் திசையில் ஓடி , கால்வைகளின் கறைகளில்  வெள்ளப்பெருக்கிற்கு வித்திட்டது. 
   இச்செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்தது. 
எதிர்வீட்டு சன்னலை நீர் மூடியதை வைத்து , நீரினளவு பரணைத் தொட்டிருக்கும் என்பதை கணக்கிட்டேன். இனி யார் சம்மதித்தாலும் இல்லையென்றாலும் படகுகளின் உதவி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற முடியாது. watsapp மூலமாக உதவி கோரி  நண்பர்களுக்கு செய்தியை பரப்பினேன். சிலர் watsapp மூலமாக அவர்களுக்கு வந்த பகுதி வாரியாக பிரிக்கப்பட்ட உதவி எண்களை எனக்கு அனுப்பினர். அவ்வாறு வந்த எந்த எண்ணும் வேலை செய்யவில்லை!!!!!. கைபேசி மின் இருப்பு குறைந்ததுதான் மிச்சம்.நமக்கு sms/watsapp மூலமாக எந்த செய்தி  வந்தாலும் அதன் உண்மை தன்மையை சற்றும் அறிய முற்படாமல் , கண்மூடித்தனமாக நாம் பரப்பும் செய்தி எவ்வளவுகுழப்பத்தை உண்டாக்கும் என்று அன்று உணர்ந்தேன் .
     எனக்கு அப்பொழுது ஒரு அழைப்பு வந்தது, "உங்க மெசேஜ்'ஐ முகநூலில் பார்த்தேன்.என்னால நாலு  பேர எங்க வீட்ல தங்க வச்சுக்க முடியும். எங்க வரனும்னு  சொல்லுங்க நான் கார்ல  வந்து கூட்டிட்டு போரேன் " என்றார். ஒரு நிமிடம் திகைத்த நான் , பின்பு மெல்லிய குரலில் "படகத்தவிற வேற  எந்த வண்டியும் இங்க வர முடியாதுங்க .முடிந்தால் அவசர கால உதவி எண்களுக்கு கால்பண்ணி படகை எங்க  ஏரியாவுக்கு அனுப்ப முயற்சியுங்க." " தகவலை மேலும் பரப்புங்க.கால் பண்ணதுக்கு  நன்றி " என்று தாழ்ந்த குரலில் கூறினேன். அழைத்தவர் யார் என்று இன்றளவும் எனக்கு தெரியாது!!!. இக்காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பின்னாளில் நான் வியந்தாலும், அப்பொழுது எங்காவது ஒரு படகு கண்ணில் படாதா ? என்ற என்னத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்கவில்லை.
         விடியற்காலை ஆயிற்று , எதிர்வீட்டில் முதல் தளத்தில் குடியிருக்கும் குடும்பத்தார் தூங்கி எழுந்து, பால்கனியில் (balcony) வந்து சோம்பல் முறித்தனர் , முதல் தளத்தில்  தழும்பி நிற்கும் வெள்ளத்தை பார்த்து அதிர்ந்தனர். முதல் தளத்தில் குடியிருக்கும் தைரியத்தில் தூங்கச் சென்ற அவர்கள் வீட்டைச்சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் தூங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர்!!!!!!!. யாரும் இத்தகைய மாபெரும் வெள்ளத்தை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர்களும் பொருட்களை எடுத்து ஓரளவுக்கு உயரத்தில் வைத்துவிட்டு. இரண்டாம் தளத்திற்கு சென்றனர் , அது மொட்டை மாடி, எனவே ஒரு குடைக்குள் மூவர் தஞ்சம் புகுந்தனர்.அவர்களுக்கு தப்பித்து வெளியேற வழி எதுவும் இல்லை.
        மழையும்  நிற்கவில்லை , வெள்ளத்தின் அளவும் குறைந்தபாடில்லை.
முதல் தளத்தில் ஒரு அடி அளவிற்கு வெள்ளம் உயர்ந்தது. முதல் தளத்தில் இருந்த பொருட்களை எடுத்து உயரத்தில் வைக்க முயன்றோம். நீரின் அளவு மேலும் உயர்ந்தவுடன் அனைவரும் இரண்டாம் தளத்திற்கு சென்றோம். இரண்டாம் தளத்தில் மழைக்கு ஒதுங்கக் கூட போதிய இடம் இல்லை. வாடகைக்கு குடியுருப்போர் குடும்பத்தினரையும் சேர்த்து நாங்கள் மொத்தம் 9 பேர் , படிகட்டின் மேல் கூரையின் (headroom) கீழ் தஞ்சம் புகுந்தோம்.
    சற்று நேரத்தில் அனைத்து நெட்வொர்க் சிக்னலும் துண்டிக்கப்பட்டது!!. மிச்சமிருந்த சிறிய நம்பிக்கையும் இழந்தேன் . அப்பொழுது ஒரு ஹெலிகாப்டர் கண்ணில் பட்டது. காப்பாற்ற வந்து விட்டனர் என்று அனைவரும் மகிழ்ந்தனர். 
         அப்பொழுது , தண்ணீர் தொட்டியின் மேல் ஏரி நின்ற நான் , பார்த்த காட்சி , என் மனதில் பல சிந்தனைகளுக்கு  வித்திட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் வெள்ளக்காடு. அனைத்து  வீட்டு மாடியிலும் மக்கள் கூட்டம். அனைவரும் ஹெலிகாப்டேரை நோக்கி பலவாறு சமிக்ஞைகள் செய்தனர், அங்கு உலவிக்கொண்டிருந்ததோ ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே. ஒவ்வொரு வீட்டு மாடியிலும் 8 - 10 பேர் இருந்தனர்.    எத்தனை படகு / ஹெலிகாப்ட்டர் வந்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது.. நம்மை நாம்  மட்டுமே காப்பாற்றிகொள்ள முடியும்  என்று முடிவெடுத்த தருணம் அது.
    டிஸ்கவேரி சேனலில் , அழகிய தமிழில் மேன் வெர்சஸ் வைல்ட் (man vs wild ) ல் பியர் க்ரில்ஸ் (bear grylls) கூறும் உயிர்பிழைத்திருப்பதர்கான குறிப்புகள் அனைத்தும் என் மனதில் ஓடியது. அதில் முக்கிய குறிப்பு 
"நாம் முறையாக கற்றுகொள்ளாத எந்த செயலையும் முயற்சிக்க கூடாது"
"நம் பதட்டமும் , நம்பிக்கையின்மையும் தான் நம் முதல் எதிரி". இவ்விரண்டும் எவ்வளவு உண்மை என்று அன்று தான் தெரிந்து கொண்டேன் என்பதை மேலும் வாசித்தால் விளங்கும்.
   ஏனியோ , கயிறோ இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று சுற்றி தேடி பார்த்ததில் , ஒரு ஏணி ஒரு வீட்டின் மாடியில்  இருப்பது தென்பட்டது. அதனை எடுத்து வந்தால் பயன்படும் என்ற நம்பிக்கையில் கையில் ஒரு கையிற்றை எடுத்து , சுவர் எகிறி குதித்து சென்றேன்.  சிமெண்ட் ஓடு போட்டு வீட்டின் கூரையில் , மெதுவாக நடந்து சென்று ஏணியின் மேல் கயிற்றை வீசி , இழுக்க முயன்றேன் , சற்று அதிகாமாக அழுத்தம் கொடுத்ததில் ஓடு உடைந்தது , கீழே விழுந்தேன். இரண்டு நிமிடம் என் வீட்டார்கள் அனைவரின் பார்வையில் இருந்தும் மறைந்தேன். அனைவரும் பதறி போனார்கள்.அந்த நிமிடம் அவர்களின் கூச்சலும் கூக்குரலும் அலறலும் இன்றும் என் காதில் ஒலித்துக கொண்டு இருக்கிறது. பின்பு தண்ணீர் குழாயை பிடித்து ஏறி வீடு திரும்பினேன், ஏனியோடும் , சிறு காயங்களோடும்!!
   பதட்டத்தில் , அனைவரும் தங்களை காப்பாற்ற வேண்டி வானத்தை நோக்கி கை அசைத்தனர், யாரை அழைத்தனர் என்று இன்றளவும் எனக்கு புரியவில்லை!!!!! ஹெலிகாப்ட்டர் கூட வரவில்லை.!!!!!!!! 
      இரண்டாம் தளத்தில் இருந்து தப்பிக்க நான்கு புறமும் வழி இல்லை. முதல் தளத்தில் இருந்து தப்பித்து, பின் வீட்டின் வழியாக செல்ல சற்று கடினமான வழி உள்ளது.முதல் தளத்தில் இருக்கும் நீரின் அளவு , ஒரு சராசரி மனிதனின் கழுத்தின் அளவை தாண்டுவதற்குள்  அவ்வழியை தேர்ந்து எடுக்க வேண்டும், இல்லையெனில் தப்பிக்க வழி இல்லாத இரண்டாம் தளத்தில் அனைவரும் மாட்டிக்கொள்வோம்.
    எடுத்து வந்த ஏணியை, சோதித்து பார்க்க பாலம் போல் அமைத்து , ஏறி நின்று பார்த்தேன்,முறிந்தது!!!! தனியாக இடுப்பளவு தண்ணீரில் முதல் தளத்தில் இறங்கி , பின் வீட்டில் தாவி , பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசினேன், அவர் எங்கள் அனைவருக்கும் தங்க இடம் கொடுக்க சம்மதித்தார். (அது மூன்று மாடி குடியுருப்பு).
     பொதுவாக பக்கத்து வீட்டிற்கு செல்ல நாம் செய்ய வேண்டியது வாசல் வழியாக வெளியே தெருவிற்கு சென்று பக்கத்து வீட்டின் வாசல் வழியாக செல்ல வேண்டும். ஆனால் தற்போது நாங்கள் இதனை முதல் மாடியில் இருந்து செய்ய வேண்டும். முதல் தளத்தில் இருந்து வெளியே (தெரிவிற்கு பதில் வெள்ள நீர்) சென்று உள்ளே வரவேண்டும். அனைவரையும் ஏதோ தைரியத்தில் அழைத்து பின்வீடு வரை அழைத்து வந்து விட்டேன்.அவ்வாறு வரும் வழியில் பக்கத்து வீட்டு மாடியில் தாயும் , இரு சிறுவர்களும் நாங்கள் தப்பி செல்ல முயற்சிப்பதை கண்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் சிறு மன கசப்பு இருந்ததால் அவர்கள் எங்களுடன் இணைய தயங்கி கொண்டிருந்தார்கள்.இதனை புரிந்துக்கொண்ட என் அம்மா சற்றும் தயங்காமல் அவர்களை அழைத்தார். அழைத்த உடனே அவர்களும்  எங்களுடன் இணைந்தனர். :)  இப்பொழுது எங்கள் எண்ணிக்கை 12. பல வருட மனக்கசப்பு ஒரே வார்த்தையில் கரைந்தது. நாம் எத்தனை முறை இம்மாதிரியான் மனக்கசப்புகளுக்கு தீர்வு காண முற்பட்டுள்ளோம். அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் என்றால் கேட்கவா வேண்டும்.     இம்மாதிரியான நிகழ்வுகளை ஏற்படுத்திய வெள்ளம் என்ற பேராசிரியருக்கு நான் அவ்வப்போது நன்றி கூறுவது உண்டு.
      நாங்கள் வருவதை கவனித்த (பின்வீட்டின் )எதிர்வீட்டுக்காரர் எங்களுக்கு உதவ முன் வந்தார் , அவர் உறுதியான கயிறும், ஏணியும் தந்து  எங்களை வழி நடத்தினார். ஏணியாலும் ஒரு இரும்பு கம்பியாலும் , L வடிவில் வெளியே சென்று உள்ளே வருமாறு ஒரு பாலம் அமைத்தோம். அதனை சோதனை செய்த பின்னர் பாலத்தின் நடுவே இடுப்பில் கயிறு கட்டி கொண்டு நின்று, சிறுவர் , முதியவர் ,சிறியவர் ,பெண்கள் ஆண்கள் என்ற வரிசையில் ஒவ்வொருவராக கிடத்தினேன்.  
   ஒரு(ஒரே) வழியாக தப்பித்து சற்று பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம். அந்த வீட்டில் இப்பொழுது எங்களையும் சேர்த்து 20 பேர்க்கு மேல் தங்கினோம். அனைவருக்கும் பசி, இருப்பதோ தஞ்சம் புகுந்த வீடு, உணவு கேட்க அனைவரும் தயங்கி கொண்டிருக்க. சற்று நேரத்தில் வீட்டில் இருந்ததை வைத்து அனைவருக்கும் உணவு தயார் செய்தார்கள்.      "உப்பில்லா பண்டம் குப்பையிலாம்" முன்னோர்கள் வெள்ளத்தில் எல்லாம் பாதிக்க பட்டிருக்க மாட்டார்கள் போலும்.!!! - அவ்வாக்கியம் அன்று பொய்யானது. அன்று இருந்த பசியில் அனைவரும் சுவையை எல்லாம் சற்றும் பொருட்படுத்தவில்லை.கடைசியாக நின்றது பசி , மழை அல்ல;
     சிறுது நேரத்தில் , ' டமால் டமால் ' என்று பயங்கரமான சத்தம் கேட்டது, என்ன சத்தம் என்று தெரிந்துக்கொள்ள பால்கனி (balcony) சென்று பார்த்தோம்! திகைத்தோம்!! நாங்கள் தங்கி இருந்த வீட்டின் எதிர் வீட்டின் முதலாளி , தன் வீட்டின் சாளரத்தில் இடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை தானே கடப்பாறை கொண்டு  இடித்துக்கொண்டிருந்தார். எதற்காக இப்படி செய்கிறார் என விசாரித்தோம் , மேலும் திகைத்தோம். 
      அவ்வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில், ஒரு மாத கை குழந்தை உட்பட சுமார் 20கும் மேற்பட்டோர் , தப்பிக்க வழியின்றி , குடையின் அடியிலும் , சாளரத்தில் இருக்கும் சிறு இடத்தில் பல்லி போல் ஒட்டி கொண்டும் இருந்தனர். சில இளைஞர்கள்  கையில் கிடைத்த பிளாஸ்ட்டிக் கவர்களை ,கையில் தூக்கி பிடித்தவாறு கூரை போல் அமைத்து, பிறர் மழைக்கு ஒதுங்க வழிவகுத்துக்கொண்டும் இருந்தனர் . அவர்கள் சுமார் 12 மணி நேரமாக இவ்வாறு தவித்துக்கொண்டிருந்தனர்.
இவர்களின் தவிப்பை கண்ட எதிர்வீட்டுக்காரர் , எப்படியாவது அவர்களை காப்பற்ற வேண்டும் என எண்ணி  தன் வீட்டின் சாளரத்தை இடித்து கொண்டிருந்தார்,பின்பு அவ்வழியே  உள்ளே வருமாறு அனைவரையும் அழைத்தார் !!!!!!!! பிறரை காப்பாற்ற தன் வீட்டினை இடித்து வழிவகுக்க எதனை பேருக்கு மனம் வரும்.
     மக்களை தீர்ப்புள்ளாக்குவதையே நாம் நம்  தலையாய கடமையாக கொண்டுள்ளோம். watsapp / facebook பதிவுகளில் கூட "people are like this... " , "idiotic people.. " , " senseless morons.. " என்பன போன்ற வாசகங்கள் தான் பிரபலம். நம்மில் யாரும் நான் ஏன் இவ்வாறு செய்தேன் / நான் ஏன் இவ்வாறு செய்து  இருக்க கூடாது என்று சிந்திப்பதில்லை. 100பேர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்  ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை என்று பல முறை குறை கூறி இருப்போம் ஆனால் வேடிக்கை பார்த்த கூட்டத்தில் நானும் இருந்தேன் உதவ செல்லவில்லை என்று எத்தனை முறை  கூறியிருப்போம் ? . இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவில் , யார் வற்புறுத்தலும் இன்றி  தானே முன் வந்து உதவிய அவர் மாமனிதரே!!! 
     மாலை நான்கு மணி அளவில் முதல் மாடியில் நான்கடி அளவிற்கு  நீர் உயர்ந்து இருந்தது. சற்று நேரத்தில் இருள் சூழ்ந்தது. மெழுகுவார்த்தியின் கருணையில் சற்று வெளிச்சம் கிடைத்தது. இணையதளம் , மின்சாரம்  , தொலைபேசி,  தொலைக்காட்சி  என்று எந்த இணைப்பும் இல்லாமல் ஒரு 50 வருடம் பின்னோக்கி சென்ற உணர்வு. அத்தருணத்திலும் இயங்கி கொண்டிருந்த் ஒரே தகவல் தொடர்பு வானொலி மட்டுமே. வானொலியின் மூலமாக சென்னையின் நிலவரம் என்ன என்று அறிந்து கொண்டோம். பகுதி வாரியாக படகு உதவி எண்களை பகிர்ந்தனர். அதனை குறித்துக்கொண்டு , bsnl எண்ணில் (அப்பொழுது இயங்கிய ஒரே சேவை bsnl) இருந்து அழைத்தோம் , ஒருவர் அழைப்பை எடுத்தார்.
   "படகு உதவி மையமா ?"
   "படகா ?, எத்தனை பேர் கால் பண்ணுவீங்க ? நானே வெள்ளத்தில் சிக்கி கொண்டு படகு எதுவும் கண்ணில் தென் படாத? என பார்த்துக்கொண்டிருக்கிறேன் "
   "உங்க எண்ணை தான் உதவி எண் என்று FM ல சொல்றாங்க "
திகைத்து போனார் அவர் !!!!!!!!!!!!!!!!!!!!!!
  இவ்வாறாக வெள்ளத்தின் நடுவில் இரண்டாம் இறவை சந்திக்க ஆயத்தமானோம்.

வாழ்க்கையில் முதன் முதலாக உணவு தட்டுப்பாட்டை உணர்ந்த தருணம் அது தான் . நம்மில் எத்தனை பேர் வீட்டில் கொடுக்கும் உணவை குறை கூறாமல் சாப்பிட்டிருக்கிறோம் .எவனொருவனுக்கு  உணவை தேர்ந்து எடுத்து உண்ணும் சுதந்திரம் உள்ளதோ ,  அவனே மிகப்பெரிய பாக்கியசாலி. அவ்வாறு பார்த்தல் நாம் அனைவருமே பாக்கியசாலிகள் தான். இருப்பதை பகிர்ந்துண்டு , சிறிய அறையில் அனைவரும் போதிய இடமின்றி உறங்கி இறவை கழித்தோம். 
   மூன்றாம் நாள் விடிந்தது,  வெள்ளம் வடியவில்லை. தன் அளவில் சற்றும் குறையாமல் இருந்தது நீர். மொட்டை மாடியில் ஒரு குடையில் தஞ்சம் புகுந்த குடும்பத்தார் என்ன ஆனார்கள் என்று மூன்றாம் தளத்தில் ஏறி பார்த்தேன் , பதறி போனேன். அவர்களை காணவில்லை , அவர்கள் தப்பித்து செல்ல வழியே இல்லை.!!!!! அங்கிருந்த syntex  நீர் தொட்டி சாய்ந்து கிடந்தது சற்று உற்று பார்த்ததில் அவர்களின் காலணிகள் சாய்ந்து கிடந்த தொட்டியின் வெளியே இருந்தது .அதன் மூலம் அவர்கள் மூவரும் தொட்டியினுள் இறவை கழித்துள்ளனர் என்றறிந்தேன் ., குரலெழுப்பி அவர்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டேன் . பின்பு கயிற்றின் மூலமாக உணவு பொட்டலத்தை , அனுப்பி வைத்தோம்.!!!
   மூன்றாம் நாள் மதிய பொழுதில் நீரின் அளவு குறைய தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு அடி  விகிதத்தில் குறைந்தது. நடந்து செல்லும் அளவுக்கு நீர் குறைந்தது போல் இருந்தது, அதனை சோதிக்க நான் மட்டும்  இறங்கி சென்றேன், டைட்டானிக் படத்தில் வருவது போல் வீட்டின் வாயில் கதவு பூட்டி இருந்தது , பூட்டோ நீருக்கு அடியில் இருந்தது. மூன்று நாட்கள் நீரின் அடியில் இருந்ததால்,திறக்க சற்று சிரமமமாக இருந்தது. ஒருவழியாக வெளியேறி கழுத்து அளவு நீரில்  மூன்று நாட்கள் கழித்து நிலத்தில் கால் பதித்தேன்!!!!!!!!!!. சிறிய கால் சட்டை ஒன்று அணிந்திருந்தேன் , நீரில் இறங்குவதால் நனைந்து விடும் என்று சட்டையை கழட்டி தலையில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.  சற்றே வெளியே நடந்து சென்றதில் வெள்ளத்தின் நாச வேலைகளையம் அதன் சுவடுகளையும் காண முடிந்தது. விவரிக்க வார்த்தை இல்லை!!!!!! ஊரெங்கும் குப்பை, இரு சக்கர வாகன குவியல்களில்  அனைவரும் தங்கள் வாகனங்களை தேட தொடங்கினர்.
         ஐந்து நிமிடம்  நடந்த பின்னர் உலர்ந்த தரையை மூன்று நாட்கள் கழித்து கண்டேன்.சொர்கமாய் உணர்ந்தேன்!! இனம் புரியாத மகிழ்ச்சி. குழந்தைப்பருவத்தின் நாம் எடுத்து வைத்த  முதல் அடி நமக்கு நினைவிருக்காது , ஆனால் அன்று நான் எடுத்து வைத்த அடி வாழ்நாள் முழுதும்  நினைவிருக்கும்.
     வெள்ளம் பலருக்கு பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்தியது ஆனால் வெள்ளத்தால் நான் இழந்தவைகளில் விலைமதிக்க முடியாத ஒன்றாக நான் கருதுவது என் நினைவு. ஆம்! நெருப்பால் கூட நினைவுகளை அழிக்க முடியாது என்பார்கள் , நெருப்பால் அழிக்க முடியுமா என்று எனக்கு தெரியாது ஆனால் வெள்ளத்தால் கண்டிப்பாக அழிக்க முடியம். சிறிய வயதில் நான் sticker ஒட்டி வைத்து விளையாடிய  நோட்டு புத்தகம் முதல் ,
LIFCO dictionary , நான் வரைந்து வைத்த ஓவியங்கள் , பன்னிரெண்டாம் வகுப்பு biology ரெகார்ட் நோட் , வீட்டின் சுவற்றில் பெரியதாக மாட்டி விடப்பட்டிருந்த  என் பொறியில் பட்டம் வாங்கிய புகைப்படம் மற்றும்  பல புகைப்படங்கள் , என் அம்மாவின்  பட்டு புடைவைகள்  என மீட்டெடுக்க முடியாத பல நினைவுகள் அதில் அடக்கம். சகதி படிந்து கிழிந்த என் நினைவுகளை என் கையாலே சாக்கடையில் வீச வைத்தது இவ்வெள்ளம்.
வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள்  இவை என்றால், வெள்ளத்தின் பின்விளைவு எண்ணிலடங்காதவை. 
       பாதிப்புகளில் இருந்து சற்று மீண்டு வீட்டில் முழுதாய் குடியேற 15 நாட்களுக்கு மேல் ஆயிற்று.

  மொத்தத்தில் இந்த மூன்று நாட்களில் வெள்ளம் என்ற பேராசிரியர் கற்று தந்த பாடம்  என்பது ஏட்டு கல்விகள் நமக்கு கற்று தர மறந்த பாடம் , சமூகம் நம்மக்கு கற்றுத்தர மறுத்த பாடம். !!!!!!!!!!!
           
            வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
             உள்ளத்தின் உள்ளக் கெடும்.

https://en.wikipedia.org/wiki/2015_South_Indian_floods
                


****எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்***

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உன் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. அந்த சூழலிலும் பதட்டம் அடையாமல் நம்பிக்கையை கை விடாமல் இருந்தது சிறப்பு. அதட்கு உனக்கு முன் உதவியாய் இருந்த பியர் க்ரில்ஸ் (bear grylls) கு நன்றி.:)

    தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த எங்களுக்கு உன் அனுபவத்திலிருந்து நிறைய பாடம்.

    முகநூலில் பார்த்த மெசேஜ்'ஐ கொண்டு தொலைபேசியை அழைத்தவர்.பிறரை காப்பாற்ற தன் வீட்டின் சாளரத்தை இடித்த மானிடர்.பல வருட மனக்கசப்பை ஒரே வார்த்தையில் கரைந்த உன் தாய்.கயிறும், ஏணியும் தந்து உதவிய எதிர்வீட்டுக்காரர் என இவர்கள் அனைவருமே கடவுள்(நடிகர் கமல் ஹாசன் அன்பே சிவம் படத்தில் கூறுவது போல).

    இது போன்று பல கடவுள்கள் தோன்ற வெள்ளம் ஒரு காரணமாக இருந்தது என்று தான் கூற வேண்டும். இவர்களே பின் வந்த காலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்(6 நாள் போராட்டத்தில்) மெரினா முழுதும் திரண்டிருந்த மக்களுக்கு அணைத்து வசதிகளும் இடம் தேடி வர காரணமாக இருந்திருக்கலாம். பகைமையை விடுத்தது அறம் செய்த்து வாழ காலம் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது போலும். மக்களை நேசிப்போம். திருவள்ளுவர் கூறியவாறு நினைப்போம்

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

    உன் அனுபவத்தை வார்த்தைகளால் எங்களுக்கு கொடுத்த உன் எழுத்து மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Marina Beach To Marine Drive